ஐரோப்பா

மத்திய கிழக்கில் போர் பதற்றம் : இத்தாலியின் இராணுவ தளம் பாதிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் போர் சூழலில் 300 பேரைக் கொண்ட தனது இராணுவத் தளம் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இத்தாலிய பிரதமர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பதட்டத்தைக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில், ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) , “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஒருதலைப்பட்ச இராணுவ நடவடிக்கைகளை தனது நாடு நிராகரிப்பதாகக் கூறினார். “(இது) […]

இலங்கை செய்தி

புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி செயலாளர்

  • February 28, 2026
  • 0 Comments

புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது. எதிர்கால சந்ததியினருக்காக மேற்கொள்ளப்படும் இந்த புதிய கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரின் ஆதரவும் அவசியம் என வலியுறுத்தினார். […]

உலகம்

ஈரானின் பதிலடி தாக்குதல் – 40 பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கமைய இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மினாப் கவுண்டியில் உள்ள ஒரு பாடசாலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 48 மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்புடைய செய்தி  ஈரான் மக்களுக்கு சுதந்திரம் – ட்ரம்ப் அறிவிப்பு!

உலகம் செய்தி

ஈரான் மக்களுக்கு சுதந்திரம் – ட்ரம்ப் அறிவிப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரானில் ‘சுதந்திரம்’ தான் தனது முக்கிய குறிக்கோள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல் குறித்து வொஷிங்டன் போஸ்ட்டிடம் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஈரான் “பாதுகாப்பான” இடமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறிய அவர், எனக்கு ஒரு பாதுகாப்பான தேசம் வேண்டும், அதுதான் நமக்கு இருக்கப் போகிறது.” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று காலை முதல் ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி (BREAKING NEWS) […]

இந்தியா செய்தி

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழப்பு

  • February 28, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சூர்யஸ்ரீ என்ற பெயரில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துள்ளன மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டு படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா செய்தி

போர் பதற்றங்களுக்கு மத்தியில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பிரதமர் ஸ்டார்மர்

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் நிலையில், பிரதமர் ஸ்டார்மர் (Starmer) அவசர கோப்ரா(COBRA) குழுக் கூட்டத்தை நடத்தினார். சனிக்கிழமை காலை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டன. தெஹ்ரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தி இது முன்கூட்டிய தாக்குதல் நடவடிக்கை என இரு நாடுகளும் விளக்கம் அளித்தன. இதற்கு பதிலாக, ஈரான் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கின் பல பகுதிகள் ஏவுகணைகளால் இலக்கு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகம் செய்தி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் – மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்

  • February 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதை அமெரிக்க, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். மிகப்பெரிய போர் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இதேவேளை ஈரான் பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதென இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப், ஈரானிய அரசாங்கத்தை கையகப்படுத்த முயற்சி செய்துள்ளார் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதற்காக ஈரானிய மக்களுக்கு இப்பொழுது செயற்படுங்கள் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரானில், ஐந்து நகரங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவுததம் […]

இலங்கை உலகம்

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் தமது வான்பரப்புகளை மூடியமையினால் பிரித்தானியா, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு நாடுகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானங்கள் சவூதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பி விடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள் அதிகரித்து […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கில் போராட்டம்!

  • February 28, 2026
  • 0 Comments

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் முழக்கத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘தாயக செயலணி’ அமைப்பின் ஏற்பாட்டில் இந்த எழுச்சிப் போராட்டங்கள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அங்கிருந்து பேரணியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் அமைப்பினர், கல்விச் சமூகத்தினர் […]

இலங்கை செய்தி

கச்சத்தீவு திருவிழா நிறைவு: 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

  • February 28, 2026
  • 0 Comments

  வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்று (27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இன்று (28) நிறைவடைந்தது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன. அத்துடன், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. […]

error: Content is protected !!