ஐரோப்பா செய்தி

ஆபாச ‘டீப்ஃபேக்’ சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்: பிரித்தானிய பிரதமர் கடும் கண்டனம்

  • January 9, 2026
  • 0 Comments

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘X’ தளத்தின் ‘Grok’ AI கருவி, பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்தரிக்கும் ‘டீப்ஃபேக்’ (Deepfake) படங்களை உருவாக்க அனுமதிப்பதாகப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக, புகைப்படங்களில் உள்ள ஆடைகளை டிஜிட்டல் முறையில் நீக்கும் ‘நூடிஃபிகேஷன்’ (Nudification) கருவிகளாக கிராக் (Grok) பயன்படுத்தப்படுவதற்கு உலகெங்கிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது “வெட்கக்கேடானது மற்றும் அருவருப்பானது” எனப் பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ‘X’ தளத்திற்குத் தடை விதிப்பது […]

உலகம்

சூடான் உள்நாட்டு போர் : மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில்!

  • January 9, 2026
  • 0 Comments

சூடானில் ஆயிரம் நாட்கள் நீடித்த போர், மில்லியன் கணக்கான மக்களை வறுமையில் ஆழ்த்தியுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. சூடானின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதமானோருக்கு உதவி தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 30 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவியை நம்பியுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. சூடானில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) மற்றும் சூடான் ஆயுதப் படைகளுக்கும்  (SAF)   இடையில் இடம்மெபற்ற போர் மக்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழித்துள்ளது.    

இலங்கை செய்தி

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

  • January 9, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரைவிளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். […]

ஐரோப்பா செய்தி

நிழல் வங்கிகளால் பிரித்தானியாவிற்கு நிதியியல் ஆபத்து : பிரபுக்கள் சபை எச்சரிக்கை

  • January 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து வரும் ‘நிழல் வங்கி’ (Shadow Banking) துறையால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பிரபுக்கள் சபை (House of Lords) எச்சரித்துள்ளது. சுமார் 16 டிரில்லியன் டொலர் மதிப்பிலான இந்த நிழல் வங்கித் துறையானது, பாரம்பரிய வங்கிகளுக்கு அப்பால் இயங்கும் தனியார் கடன் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு அமைப்புகளை உள்ளடக்கியது. இந்த நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதி நெருக்கடியைப் போன்றதொரு மோசமான சூழலை […]

ஐரோப்பா

நிதி நெருக்கடியில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் – அடுத்த நகர்வு என்ன?

  • January 9, 2026
  • 0 Comments

உக்ரைனில் துருப்புக்களை நிலைநிறுத்த பிரித்தானிய அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு £28 பில்லியன் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. பிரிட்டனின் உயர்மட்ட இராணுவத் தலைவர்,   ரிச்சர்ட் நைட்டன் (Air Chief Marshal Sir Richard Knighton), , பாதுகாப்பு அமைச்சகத்தின் மதிப்பீட்டில் இப்போது முதல் 2030 வரை £28 பில்லியன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு இடம்பெற்ற […]

அரசியல் இலங்கை செய்தி

2026 ஆம் ஆண்டில் 55 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்: ஜனாதிபதி உறுதி!

  • January 9, 2026
  • 0 Comments

இலங்கை வரலாற்றில் அரச அனுசரணையின் கீழ் அதிகளவான வீடுகள் நிர்மாணிக்கப்படும் ஆண்டாக 2026 ஆம் ஆண்டு அமையும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake தெரிவித்தார். “அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 31 ஆயிரம் வீடுகளுடன் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 55 ஆயிரம் வீடுகள் வரை நிர்மாணிக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி கூறினார். டித்வா […]

ஐரோப்பா

உக்ரைனில் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணை தாக்குதல்!

  • January 9, 2026
  • 0 Comments

ரஷ்ய இராணுவம் ஹைப்பர்சோனிக் ஓரெஷ்னிக் ஏவுகணையை உக்ரைன் நோக்கி ஏவியதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் இல்லத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக மேற்படி ஏவுகணை ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இடைநிலை தூர ஓரெஷ்னிக் ஏவுகணையை ரஷ்யா பயன்படுத்துவது இது இரண்டாவது முறையாகும். இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 10 மடங்குக்கும் அதிகமான வேகத்தில் செல்ல கூடியது எனவும், இதனை இடைமறிக்க இயலாது என்றும் புட்டின் அறிவித்துள்ளார். இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை மட்டுமல்ல, […]

இலங்கை செய்தி

இலங்கையை அச்சுறுத்தும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்

  • January 9, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது பொத்துவிலுக்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது நாளை மாலை யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு இடையே கரையை கடக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். குறிப்பாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் தற்காலிகமாக சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், கடலோர […]

உலகம்

பிலிப்பைன்ஸில் சரிந்து விழுந்த குப்பைக் கிடங்கு – 38 பேர் மாயம்!

  • January 9, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் குப்பைக் கிடங்கு ஒன்று  சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செபு நகரின் (Cebu ) பினாலிவ் (Binaliw) கிராமத்தில் இன்று  இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு பணியாளர்கள் 13 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும், சுமார் 38 பேர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கை தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிவில் பாதுகாப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.  

இந்தியா

31 வயதான அமைச்சர் மகனின் காலில் விழுந்து வணங்க முயன்ற 73 வயது எம்.எல்.ஏ.!

  • January 9, 2026
  • 0 Comments

இந்தியாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சரின் 31 வயது மகனின் காலில் விழுந்து , 73 வயதான பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ., வணங்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தேவேந்திர குமார் ஜெயின் என்பவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.எல்.ஏ. ஆவார். தனது 73 ஆவது பிறந்தநாளை அண்மையில் இவர் கொண்டாடினார். இந்திய ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் இந்நிகழ்வில் […]

error: Content is protected !!