இலங்கை செய்தி

எரிபொருள் விலை அதிகரிப்பு

  • February 28, 2026
  • 0 Comments

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா டீசல் நான்கு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 281 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 6 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், ஒரு ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. எனினும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்தவித […]

இந்தியா செய்தி

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்க கூடியது – ராகுல் காந்தி

  • February 28, 2026
  • 0 Comments

அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளை அழிக்க கூடியது என என இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சுமத்தியுள்ளார் பஞ்சாப் மாநிலம் பர்னாலாவில் நடைபெற்ற மஸ்தூர் கிசான் மகா பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்க ஒப்பந்தம், விவசாயத் துறை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான்கு மாதங்களாக முடங்கி கிடந்த நிலையில் தற்போது பிரதமர் ஏன் 15 நிமிடங்களில் செய்தார் […]

விளையாட்டு

இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றியிலக்கு

  • February 28, 2026
  • 0 Comments

இலங்கை அணி 213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (28) பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. பல்லேகலை இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷகிப்சடா பர்ஹான் 100 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் […]

செய்தி விளையாட்டு

போர் பதற்றத்தால் வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையினை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் பயணம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான அவசரக்காலத் திட்டங்களை அமுல்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்இன்று காலை முதல் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மத்திய […]

உலகம்

ஈரானின் 02 முக்கிய அதிகாரிகள் உயிரிழப்பு!

  • February 28, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய தாக்குதல்களில் இரண்டு மூத்த ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்களும், ஒரு பிராந்திய வட்டாரமும் வெளியிட்டுள்ள தகவலில்,  ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி ஈரான் மீதான தாக்குதல் தேவைப்படும்வரை தொடரும் – இஸ்ரேல் முழுக்கம்!

இலங்கை

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை!! பீதியடைய வேண்டாம்!

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை இருந்தபோதிலும், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இல்லை என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கூறுகிறார். தற்போது நிலவும் போர் நிலைமை குறித்து கருத்து வெளியிட்ட அவர்,  எரிபொருளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறினார். மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நாட்டிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதி செய்யப்படுவதில்லை என்றும், இதனால் பொதுமக்கள் எந்த பீதியையும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  […]

உலகம்

ஈரான் மீதான தாக்குதல் தேவைப்படும்வரை தொடரும் – இஸ்ரேல் முழுக்கம்!

  • February 28, 2026
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கை  தேவைப்படும் வரை” தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இன்று ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஒரு புதிய மோதலுக்கு வழிவகுத்தன. ஈரான் முன்னெடுத்த பதிலடி தாக்குதல் நடவடிக்கையில் சுமார் 60 பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் ஈரானிய மக்களின் சுதந்திரத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.  

இலங்கை செய்தி

போர் பதற்றம் – இலங்கையர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவசர இலக்கம்

  • February 28, 2026
  • 0 Comments

  மத்திய கிழக்கில் உள்ள உறவினர்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி அவசர அழைப்புக்காக (Hotline) 1989 என்ற இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் WhatsApp / Imo: +94 71 980 2822 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலினால் இதுவரை இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பதையும் இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. […]

இலங்கை செய்தி

மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு நடந்தது என்ன?

  • February 28, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் காரணமாக இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தூதரகங்கள் ஊடாக, போர் பதற்றம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விசேட வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த வழிகாட்டல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.​ பஹ்ரைனில் இலங்கையர்கள் தங்கியிருந்த நகரொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அங்குஅ தங்கியிருந்த இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அவசரத் தேவைகள் […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஈரான் பதிலடி தாக்குதல் – பாடசாலைகளை‌ மூடியது இஸ்ரேல்

  • February 28, 2026
  • 0 Comments

ஈரான் பதிலடி ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெருந்திரளான பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் சமூகச் சேர்க்கைகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு சூழ்நிலை மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை […]

error: Content is protected !!