செய்தி விளையாட்டு

2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் அறிவிப்பு

  • January 30, 2026
  • 0 Comments

பிப்ரவரி 7ம் திகதி ஆரம்பமாகும் ஆண்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) அறிவித்துள்ளது. மொத்தம் 24 அதிகாரிகள் கள நடுவர்களாகவும், ஆறு அதிகாரிகள் போட்டி நடுவர்களாகவும் பணியாற்றுவார்கள். கொழும்பில்(Colombo) நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான தொடக்கப் போட்டிக்கு கள நடுவர்களாக குமார் தர்மசேன(Kumar Dharmasena) மற்றும் வெய்ன் நைட்ஸ்(Wayne Knights) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தியாவில் நடைபெறும் ஸ்காட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு நிதின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தில் பின்னடைவு!

  • January 30, 2026
  • 0 Comments

50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் செயற்திட்டத்தை நாசா ஒத்திவைத்துள்ளது. உறைபனி வெப்பநிலை காரணமாக மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் மூன்ஷாட் (Artemis moonshot)  என்ற திட்டம் பிப்ரவரி 6ஆம் திகதிக்கு முன்னதாக செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இருப்பினும் தற்போது 02 நாள்  தாமதமாகியுள்ளது. ரொக்கெட்டிற்கு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையை சனிக்கிழமை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சீரற்ற வானிலை காரணமாக அந்த திட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாதகமான வானிலை ஏற்பட்டால் ஆடை ஒத்திகைகளை வரும் திங்கட்கிழமை மேற்கொள்ள […]

இலங்கை செய்தி

உண்ணாவிரதம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்துவிட்டு வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குமாறு வேண்டுகோள்

  • January 30, 2026
  • 0 Comments

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு இவர்கள் இடத்துக்கு பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்து கூலி வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற […]

இந்தியா செய்தி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உத்தரபிரதேச நபருக்கு 20 வருட சிறைத்தண்டனை

  • January 30, 2026
  • 0 Comments

2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேச(Uttar Pradesh) நீதிமன்றம் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. அக்டோபர் 29, 2020 அன்று டபுவா(Dapua) காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் உத்தரபிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ரவி பாண்டே(Ravi Pandey) என அடையாளம் காணப்பட்டதாகவும் தலைமை வழக்கறிஞர் ரவீந்தர் குப்தா தெரிவித்துள்ளார். சம்பவ தினத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றபோது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பாண்டே, வேலைக்காக உதவி […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பூமியை போலவே தோற்றமளிக்கும் மற்றுமொரு கோள் கண்டுப்பிடிப்பு!

  • January 30, 2026
  • 0 Comments

பூமியை போலவே இருக்கும் ஒரு வெளிப்புறக் கோளை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர். HD 137010 b என்று அழைக்கப்படுகின்ற இந்த கோளானது செவ்வாய் கிரகத்தை விடக் குளிராக இருக்கலாம் என கருதப்படுகிறது. நாசாவின் ஓய்வுபெற்ற கெப்லர் (Kepler) விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளைப் பயன்படுத்தி குறித்த கோள்  கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது  146 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனைப் போன்ற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் இந்த அமைப்பானது பூமியின் வெப்பத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே பெறுவதாகவும் ஆய்வாளர்கள் […]

இலங்கை

துப்பாக்கிகளை வைத்திருப்போருக்கு பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!

  • January 30, 2026
  • 0 Comments

துப்பாக்கி உரிமங்களை வைத்திருக்கும் அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், 2026 ஆம் ஆண்டுக்கான உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உரிமங்களை புதுப்பிக்கும் காலம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது. உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இன் படி, பிப்ரவரி 10, 2026 க்கு முன் அபராதம் செலுத்தி துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்க வேண்டும். குறித்த காலக்கெடுவிற்குள் உரிமத்தைப் புதுப்பிக்காத எந்தவொரு துப்பாக்கி உரிமையாளருக்கும் […]

இந்தியா செய்தி

மாதவிடாய் ஆரோக்கியம் அடிப்படை உரிமை – அனைத்து மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை வழங்குமாறு உத்தரவு

  • January 30, 2026
  • 0 Comments

மாதவிடாய் ஆரோக்கியம் ஓர் அடிப்படை உரிமை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அனைத்து பாடசாலை மாணவிகளுக்கும் இலவசமாக சானிட்டரி பேட்களை பாடசாலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளில் 06 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மத்திய அரசின் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்தக் கோரி ஜெயா தாக்கூர் என்பவர் 2024 டிசம்பர் 10 அன்று, தாக்கல் செய்த […]

இலங்கை செய்தி

கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது!

  • January 30, 2026
  • 0 Comments

அரசியலமைப்பு பேரவை Constitutional Council நாளை (31) சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. கணக்காய்வாளர் நாயகம் Auditor general தொடர்பில் தீர்மானம் எடுக்கும் நோக்கிலேயே இக்கூட்டம் இடம்பெறுகின்றது. கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த WPC விக்ரமரத்ன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இன்றுவரை புதிய கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. பதில் கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்டவரின் பதவிகாலமும் முடிவடைந்தது. இந்நிலையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டிருந்த பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது. இந்நிலையிலேயே […]

விளையாட்டு

ஆட்டம் ஆரம்பம்: களத்தடுப்பை தேர்வு செய்தது இங்கிலாந்து! (Update)

  • January 30, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.40 மணிக்கு ஆரம்பமானது. மழை காரணமாக தாமதித்தே போட்டி ஆரம்பமானது. இதனால் 17 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்துள்ளது.   ………… முதலாம் இணைப்பு இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T20 போட்டி, மழை காரணமாக தாமதமாகியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் முதல் ஆட்டம், கண்டி -பல்லேகல […]

இலங்கை செய்தி

இஸ்ரேலில் விசேட தேவையுடைய மாணவி பாலியல் வன்புணர்வு – இலங்கை பிரஜையின் மோசமான செயல்

  • January 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலில் உள்ள விசேட தேவையுடையோர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 2025 மே மாதம் தொழில் நிமித்தம் இஸ்ரேலுக்கு சென்றதாகக் கூறப்படும் குறித்த சந்தேக நபர்,  தனது உத்தியோகபூர்வ வேலைத் துறைக்கு அப்பால் தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்டர்போலின் (Interpol) இஸ்ரேலிய கி கிளையிடமிருந்து தூதரகத்திற்கு கிடைத்த தகவலின்படி, அவர் பெயிட் ஷமேஷ் […]

error: Content is protected !!