உலகம் செய்தி

தாய்லாந்துடனான மோதல் : கம்போடியாவில் இருந்து வெளியேறிய அரை மில்லியன் மக்கள்!

  • December 21, 2025
  • 0 Comments

தாய்லாந்துடனான இரண்டு வார கால எல்லை மோதல் நிலைமை காரணமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புனோம் பென்னின் (Phnom Penh) உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. ​​தாய்லாந்தின் F-16 விமானங்களால் நடத்தப்படும் பீரங்கி குண்டு தாக்குதல், ரொக்கெட்டுகள் மற்றும் வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அரை மில்லியனுக்கும் அதிகமான கம்போடிய மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் […]

உலகம் ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் – பிரித்தானியா இடையே இராஜதந்திரச் சந்திப்பு

  • December 21, 2025
  • 0 Comments

ஈரான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வரும் இராஜதந்திர விரிசல்களுக்கு மத்தியில், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் ஆகியோருக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதாக ஈரானிய அரசு ஊடகம் அறிவித்துள்ளது. பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் குறித்து பல்வேறு மட்டங்களில் ஆலோசனைகளைத் […]

இலங்கை செய்தி

வான் பாயும் 36 பிரதான குளங்கள்: நில்வலா ஆற்றின் நீர்மட்டமும் உயர்வு

  • December 21, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 36 பிரதான குளங்கள் உட்பட மொத்தம் 88 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருகின்றன. இது குறித்து கருத்து வெளியிட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் சூரியபண்டார, நீர் வெளியேற்றத்தால் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி நில்வலா நதியை அண்டிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த […]

இலங்கை செய்தி

தையிட்டியில் பெரும் பதற்றம்: வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

  • December 21, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து முன்னெடுத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது இன்று காலை கடும் பதற்றமான சூழல் நிலவியது. போராட்டத்தின் போது சிவில் சமூகச் செயற்பாட்டாளர் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஒருவர் உட்பட மொத்தம் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்களத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன. இதன்போது, அங்கு நின்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் […]

இலங்கை

பணி முடிந்து வீடு திரும்பிய அதிகாரியை தாக்கிய NPP அரசாங்கத்தின் எம்.பி!

  • December 21, 2025
  • 0 Comments

சூரியகந்த காவல் நிலையத்தில் பணியாற்றும்  காவல்துறை அதிகாரி ஒருவர், தனது கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, ​​இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார சுபசிங்க உள்ளிட்ட குழுவினரால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் போது காயமடைந்த காவல்துறை அதிகாரி தற்போது எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முறைப்பாட்டின்படி,  சூரியகந்த காவல்துறையினரால் சமீபத்தில் நடத்தப்பட்ட கஞ்சா சோதனையில் குறித்த அதிகாரி […]

உலகம் செய்தி

ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பில் FBI யின் விசாரணைக்கு முன்னதாகவே முறைப்பாடு செய்த விவசாயி!

  • December 21, 2025
  • 0 Comments

ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) குறித்து 1996 ஆம் ஆண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதிய ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. அவர் குழந்தைகளின் ஆபாசப் படத்தை தேடுவது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எப்ஸ்டீன் (Epstein) மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ( Ghislaine Maxwell) மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய விவசாயி ஒருவர் அரசாங்கம் தனது கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள 30 ஆண்டுகள் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இனி யாரும் என்னை பொய்யர் எனக் கூறமாட்டார்கள் என்றும் அவர் […]

ஐரோப்பா செய்தி

பிரெஞ்சு எல்லை கட்டுப்பாடுகளில் தொழில்நுட்ப சிக்கல் – படகு சேவைகள் பாதிப்பு!

  • December 21, 2025
  • 0 Comments

பிரெஞ்சு எல்லைக் கட்டுப்பாடுகளைப் பாதித்த தகவல் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக டோவர் துறைமுகத்தில் படகு சேவை நேற்று ஒரு மணி நேரம் வரை தாமதமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டோவர் துறைமுகம் கூட்டாளர் நிறுவனங்களுடன் இணைந்து பிரச்சினைகளைத் தீர்க்க இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பயணிகள் தங்கள் பயணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டாம் என்றும்  அறிவுறுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் ஈவ் இடையே பிரித்தானியா முழுவதும் 37.5 மில்லியன் கார் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பயண தாமதமானது […]

உலகம் செய்தி

கனடாவின் மனிடோபா மாநிலம் வழங்கும் சிறப்பு சலுகை – விசா காலாவதியானாலும் தங்கலாம்!!

  • December 21, 2025
  • 0 Comments

கனடாவின் மனிடோபா (Manitoba) மாநிலம் சிறப்பு பணியாளர் அனுமதி விசாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. நீங்கள் மனிடோபாவில் வசிக்கும்பட்சத்தில், உங்களின் பணி அனுமதிப்பத்திரம் ஏற்கனவே காலாவதியாகியிருந்தால், அல்லது விரைவில் முடிவடையும் நிலையில் இருந்தால் தகுதிவாய்ந்த மாகாண நியமனத் திட்ட வேட்பாளர்களுக்கு 02 வருட சிறப்பு பணி அனுமதி பத்திரம் வழங்கப்படும். தொழிலாளர்கள் இடையூறு இல்லாமல் மாகாணத்தில் தங்குவதற்காக இந்த திட்டம் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் பயனைப் பெற விதிகளைப் பூர்த்தி செய்து, தகுதியான ஆவணங்களுடன், உங்கள் IRCC […]

உலகம்

கரீபியின் கடற்பகுதியில் மற்றொரு டேங்கர் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா!

  • December 21, 2025
  • 0 Comments

கரீபியன் கடலின் சர்வதேச எல்லைப் பகுதியில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க படையினர் அறிவித்துள்ளனர். குறித்த நடவடிக்க நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem) இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கடலோர காவல்படையால் மேற்கொள்ளப்பட்ட விடியற்காலை நடவடிக்கைக்கு பாதுகாப்புத் துறை ஆதரவளிப்பதாக கூறிய அவர், டேங்கர் கடைசியாக வெனிசுலா  துறைமுகத்தை அடைந்ததாக  கூறினார். போதைப்பொருள் வர்த்தகத்திற்கு நிதியளிப்பதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் டேங்கர் கப்பல்களை தடுத்து நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்த சில […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை நோக்கி சர்வதேச பிரதிநிதிகள் படையெடுப்பு: முக்கிய புள்ளிகளை களமிறக்கும் டில்லி, பீஜிங்!

  • December 21, 2025
  • 0 Comments

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியல் குழு தலைவர் ஜாவோ லெஜி நாளை மறுதினம் (23) இலங்கை வருகின்றார். சீனாவில் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அடுத்தப்படியாக அரசாங்கத்தின் மூன்றாவது முக்கிய நபராக இவர் கருதப்படுகின்றார். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) கொழும்புவரும் நிலையிலேயே இவரது விஜயமும் இடம்பெறுகின்றது. ஜாவோ லெஜியின் கொழும்பு பயணம் தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே வெளியாக இருந்தன. இவ்விஜயத்தின்போது அவர் இலங்கை மீண்டெழுவதற்குரிய உதவித்திட்டங்களையும் அறிவிக்க இருந்தார். இந்நிலையிலேயே […]

error: Content is protected !!