ஐரோப்பா செய்தி

பிரான்சில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் படுகாயம்

  • December 22, 2025
  • 0 Comments

தென்கிழக்கு பிரெஞ்சு(France) நகரமான லியோனுக்கு(Lyon) அருகிலுள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மக்கள் அந்தப் பகுதியைத் தவிர்த்து வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இந்த நேரத்தில் உள்ளூர்வாசிகளுக்கு நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் இல்லை என்றும் நகர மேயர் தெரிவித்துள்ளார். “வெடிப்பின் சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும்” என்று ஆலையை வைத்திருக்கும் நோர்வே(Norwey) ரசாயன நிறுவனமான எல்கெம்(Elkem) குறிப்பிட்டுள்ளது.

உலகம் செய்தி

பிரித்தானிய சிறைகளில் உண்ணாவிரதம் இருந்த இரண்டு பாலஸ்தீன போராளிகள் மருத்துவமனையில் அனுமதி

  • December 22, 2025
  • 0 Comments

குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பரின் கூற்றுப்படி, சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு பாலஸ்தீன(Palestine) போராளிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். லண்டனில்(London) உள்ள பென்டன்வில்(Bentonville) சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 வயது கம்ரான் அகமது(Kamran Ahmed) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது சகோதரி ஷாஹ்மினா ஆலம்(Shahmina Alam) அல் ஜசீராவிடம்(Al Jazeera) குறிப்பிட்டுள்ளார். சர்ரேயில்(Surrey) உள்ள பிரான்ஸ்ஃபீல்டில்(Bransfield) 50 நாட்களாக உணவு சாப்பிடாமல் இருந்த 30 வயதான அமு கிப்(Amu Gibb) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனத்திற்கான கைதிகள் குழுவும் […]

உலகம் செய்தி

11 ஈக்வடார்(Ecuador) ராணுவ வீரர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • December 22, 2025
  • 0 Comments

நாடு தழுவிய குற்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக, குவாயாகில்(Guayaquil) நகரத்திலிருந்து நான்கு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்து காணாமல் ஆக்கியதற்காக 11 ராணுவ வீரர்களுக்கு 34 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஈக்வடார்(Ecuador) நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன குழந்தைகள் மீதான ஒரு வருட விசாரணையை இந்த தண்டனை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. குழந்தைகள் கடைசியாக டிசம்பர் 8, 2024 அன்று தங்கள் சுற்றுப்புறத்திற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தை நோக்கி நடந்து செல்லும்போது காணப்பட்டுள்ளனர். ஸ்டீவன் மெடினா(Steven Medina), நெஹேமியாஸ் […]

Uber robotaxi self-driving car in London streets அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் ஐரோப்பா

ஓட்டுநர் தேவையில்லை! – 2026-ல் லண்டனில் ஊபெர் ரோபோடாக்ஸி!

  • December 22, 2025
  • 0 Comments

ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) ஆகிய நிறுவனங்கள் சீனத் தொழில்நுட்ப நிறுவனமான பைடு (Baidu) உடன் இணைந்து, வரும் 2026-ஆம் ஆண்டு லண்டன் வீதிகளில் ‘ரோபோடாக்ஸி’ (Robotaxi) எனப்படும் ஓட்டுநர் இல்லா வாடகைக் கார்களைச் சோதிக்கப் போவதாக இன்று (டிசம்பர் 22, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. ஊபெர் (Uber) மற்றும் லிஃப்ட் (Lyft) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தனித்தனியாக பைடு (Baidu)வின் ‘அப்பல்லோ கோ’ (Apollo Go) தானியங்கி வாகனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளன. […]

உலகம் செய்தி

லெபனானின் சிடோன் அருகே இஸ்ரேல் தாக்குதல் – மூவர் மரணம்

  • December 22, 2025
  • 0 Comments

லெபனானின்(Lebanon) சிடோன்(Sidon) அருகே இஸ்ரேல்(Israel) நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் அரசு நடத்தும் தேசிய செய்தி நிறுவனம், தெற்கு கடலோர நகரமான சிடோனில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இஸ்ரேலிய ட்ரோன் மூலம் ஒரு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதனால் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் விரோதத்தை முடிவுக்குக் கொண்டுவர நவம்பர் 2024 போர் நிறுத்தம் […]

உலகம் செய்தி

முன்னாள் சிரிய சிறை காவலர் மீது ஜெர்மனி குற்றச்சாட்டு

  • December 22, 2025
  • 0 Comments

சிரிய(Syria) உளவுத்துறையின் முன்னாள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் பஷார் அசாத்தின்(Bashar al-Assad) கீழ் டமாஸ்கஸ்(Damascus) சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை சித்திரவதை செய்து கொலை செய்ததாக ஜெர்மன்(Germany) வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மே மாதம் கைது செய்யப்பட்டு ஜெர்மன் தனியுரிமை விதிகளின் கீழ் ஃபஹத் ஏ(Fahad A) என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், ஏப்ரல் 2011 இறுதிக்கும் ஏப்ரல் 2012 நடுப்பகுதிக்கும் இடையில் சிரிய தலைநகரில் உள்ள ஒரு […]

உலகம் செய்தி

சிங்கப்பூர் தேவாலயத்திற்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளி நபர் கைது

  • December 22, 2025
  • 0 Comments

ஒரு தேவாலயத்தில் தவறான பயங்கரவாத அச்சுறுத்தல் விடுத்ததற்காக இந்திய வம்சாவளி சிங்கப்பூர்(Indian-origin Singaporean) நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேல் புக்கிட் திமா(Upper Bukit Timah) பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப்(St Joseph) தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 26 வயதான கோகுலநந்தன் மோகன்(Gokulanandan Mohan) மீது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில், அந்த நபர் தேவாலய வளாகத்திற்குள் ஒரு மேம்பட்ட வெடிக்கும் சாதனத்தை ஒத்த ஒரு சுயமாக […]

error: Content is protected !!