இலங்கை செய்தி

சேருநுவரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பயணிகள் படுகாயம்

  • December 25, 2025
  • 0 Comments

திருகோணமலை – சேருநுவர, மகிந்தபுர சந்தி பகுதியில் இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து இடம்பெற்ற சமயம் பேருந்தில் 21 பயணிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுவதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக சேருநுவர மற்றும் முத்தூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உலகம் செய்தி

நாடு கடத்தப்படவுள்ளவர்களை தங்க வைப்பதற்கு இடம் தேடும் ட்ரம்ப் நிர்வாகம்!

  • December 25, 2025
  • 0 Comments

அமெரிக்கா முழுவதும் குறைந்தது ஏழு பெரிய அளவிலான கிடங்குகளை கையகப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குடியேற்ற முறையை ஒழுங்கமைக்கும் வகையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோருக்கான தங்குமிட வசதிகளை உருவாக்க இந்த கிடங்குகளை பயன்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வொஷிங்டன் போஸ்ட்டால் (Washington Post) பெறப்பட்ட வரைவு கோரிக்கை திட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை, 5,000 முதல் 10,000 பேர் வரை தங்கக்கூடிய குறைந்தது ஏழு பெரிய தொழில்துறை கிடங்குகளை […]

உலகம் ஐரோப்பா செய்தி

வாழ்க்கை ஒரு யாத்திரை” – கிறிஸ்துமஸ் செய்தியில் நம்பிக்கையைப் பகிரும் பிரித்தானிய மன்னர்

  • December 25, 2025
  • 0 Comments

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் 2025-ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் செய்தி, இன்று மதியம் 3 மணிக்கு உலகெங்கும் ஒளிபரப்பாகிறது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க லேடி சேப்பலில் (Lady Chapel) இருந்து இந்த உரை வழங்கப்படுகிறது. புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்ட பிறகு, மன்னர் வழங்கும் முதல் கிறிஸ்துமஸ் உரை இது என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்க்கையை ஒரு ‘யாத்திரை’ (Pilgrimage) என வர்ணித்துள்ள மன்னர், இரண்டாம் உலகப் போரின் 80-வது ஆண்டை முன்னிட்டு போர் வீரர்களின் தியாகங்களையும் […]

அரசியல் இலங்கை செய்தி

சிறு கட்சிகளுக்கு ரவி வலை!

  • December 25, 2025
  • 0 Comments

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு (24) ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) பங்கேற்றிருந்தார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJP) என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க மேலும் […]

ஐரோப்பா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு – உணவு தவிர்ப்பு போராட்டத்தை முடித்துக்கொண்ட கைதிகள்!

  • December 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இருவர் தற்போது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 48 நாட்கள் உணவை மறுத்த பிறகு, குசெர் சுஹ்ரா (Qesser Zuhrah) மற்றும் அமு கிப் ( Amu Gib) ஆகிய இருவருமே மேற்படி போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கொள்ளை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள குறித்த இருவரும் ஏனைய ஆறு கைதிகளுடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மேற்படி இருவரும் சோர்வு மற்றும் வயிற்று வலி ஆகிய பிரச்சினைகளை எதிர்கொண்ட பிறகு […]

இந்தியா

இந்தியாவில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 17 பேர் உடல் கருகி பலி!

  • December 25, 2025
  • 0 Comments

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில்  சித்ரதுர்காவில் (Chitradurga) உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஸ்லீப்பர் பேருந்து ஒன்று லொறியுடன் மோதி தீப்பிடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பேருந்தின் எரிந்த எச்சங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்களை வெளியே எடுக்கவும், உடல்களை மீட்கவும் மீட்புக் குழுக்கள் போராடி வருகின்றனர். தீக்காயங்களுக்கு உள்ளான சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்வதாலும், காயமடைந்த பயணிகள் சிகிச்சையில் இருப்பதாலும் இறப்பு […]

இந்தியா

இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை வைரம்!

  • December 25, 2025
  • 0 Comments

இந்தியாவில் இயற்கையான வைரக்கற்களை ஒத்த செயற்கை வைரக்கற்களை உற்பத்தி செய்வது சமீபகாலமாக வளர்ச்சியடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துறை முந்தைய ஆண்டுகளை விட 15 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் வைர உற்பத்தியை பொருத்தவரை இந்தியா 90 விழுக்காடு பங்கு வகிக்கின்றது. இருப்பினும் இதற்கான செலவு அதிகம். ஆகவே தற்போது வியாபாரிகள் செயற்கை வைரத்தை கொண்டு இலாபம் ஈட்டும் நடவடிக்கையை முன்னெடுத்து […]

ஐரோப்பா

இலங்கை போர் குற்றவாளிகளுக்கு எதிரான தடை விரிவுப்படுத்தப்படும் – பிரித்தானிய அரசாங்கம்!

  • December 25, 2025
  • 0 Comments

இலங்கையின் போர் குற்றவாளிகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடரும் என பிரித்தானிய அரசாங்கத்தின் வெளிவிவகார செயலாளர் யெவெட் கூப்பர் அறிவித்துள்ளார். இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான அரசாங்கத்தின் தடைகளை விரிவுபடுத்துமாறு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமாரன் இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளரிடம் அழைப்பு விடுத்த நிலையில் யெவட் கூப்பர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் தமிழ் சமூகத்தின் நியாயமான கவலைகள் தொடர்பான “நீண்டகால பிரச்சினைகளை” நிவர்த்தி செய்வதற்கும் […]

இலங்கை உலகம் ஐரோப்பா செய்தி

இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு மேலும் தடை? ; உமா குமரன் கோரிக்கை

  • December 25, 2025
  • 0 Comments

இலங்கை போர்க்குற்றவாளிகள் மீதான தடைகளை மேலும் விரிவுபடுத்துமாறு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளரிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார். டிசம்பர் 16-ஆம் திகதி நடைபெற்ற வெளியுறவுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், போர் முடிந்து 15 ஆண்டுகள் ஆகியும், போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் தொடர்பில் எந்தவொரு முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதற்கான அரசியல் விருப்பம் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என அவர் […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியுடனான அரசியல் உறவை வலுப்படுத்துகிறது சீன கம்யூனிஸ்ட் கட்சி!

  • December 25, 2025
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (CPC), ஜே.வி.பிக்கும் (JVP) இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் கொழும்பு,(colombo) பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி. தலைமையகத்துக்கு (JVP headquarters) நேற்று (24) சென்றிருந்தனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்திய குழு உறுப்பினரும், ஷிசாங் ( Xizang) தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளருமான வாங் ஜூவான்செங் (Wang Junzheng) தலைமையிலான குழுவினரே இவ்வாறு சென்றிருந்தனர். ஜே.வி.பியின் செயலாளர் (JVP Secretary) […]

error: Content is protected !!