ஜெட்ஸ்டார் விமானத்தில் தட்டம்மை தொற்று: மேற்கு அவுஸ்திரேலியாவில் அவசர எச்சரிக்கை
பாலியிலிருந்து பெர்த்திற்கு வந்த ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேற்கு அவுஸ்திரேலியாவில் அவசர சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 20-ஆம் திகதி குறித்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் இருந்தவர்கள், அடுத்த 18 நாட்களுக்குத் தங்களைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், இருமல், கண்கள் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக முகக்கவசம் அணிந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை கோரியுள்ளது. 2025-ஆம் ஆண்டில் […]













