இலங்கை செய்தி

புயலுக்கு பின் இலங்கையை கட்டியெழுப்புவதில் பாரிய பங்கு வகிக்கும் இந்தியா மற்றும் சீனா!

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கையை உலுக்கிய டித்வா சூறாவளியினால்  சுமார் 04.1 பில்லியன் சேதம்  ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இந்நிலையில் புயலுக்கு பிந்தைய மறுகட்டமைப்பு முயற்சிகளில் இந்தியாவுடன் சேர்ந்து சீனாவும் முக்கிய பங்கு வகிப்பதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அண்மையில் இருநாட்டு தலைவர்களும்  நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். இந்த விஜயத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்காவை சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். […]

செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – இங்கிலாந்து அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்

  • December 29, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மெல்போர்ன்(Melbourne) மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. கடந்த வார போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தாலும் ஆஷஸ் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சிட்னி(Sydney) மைதானத்தில் அடுத்த வருடம் 4ம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து […]

உலகம் செய்தி

தெற்காசிய நாடுகளிலும் மோதல் நிலை வலுப்பெறுமா? தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்யும் பங்களாதேஷ்!

  • December 29, 2025
  • 0 Comments

இத்தாலியிலிருந்து 10 யூரோஃபைட்டர் டைபூன் மல்டிரோல் போர் விமானங்களையும், துருக்கியில் கட்டமைக்கப்பட்ட ஆறு T-129 ATAK தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் கொள்வனவு செய்ய பங்களாதேஷ் அரசாங்கம் தீர்க்கமாக செயற்பட்டு வருகிறது. இந்தோ – பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் சர்ச்சைக்குரிய நிலைமைகளுக்கு மத்தியில் பங்களாதேஷின் மேற்படி நடவடிக்கையானது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, விமானப்படையை மேம்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது. “Forces Goal 2030” திட்டத்தின் கீழ் இதற்கான முயற்சிகளை பங்களாதேஷ் அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. இந்த முயற்சி […]

அரசியல் இலங்கை செய்தி

புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவேன்: அர்ச்சுனா சர்ச்சை கருத்து!

  • December 29, 2025
  • 0 Comments

புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதானால் அதனை நான்தான் செய்வேன் என்று சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna. கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதானால் அதனை நான் தான் செய்வேன். சொல்லிவிட்டுதான் நான் அதை செய்வேன். எவருக்கும் அச்சம் ஏற்படாத வகையிலேயே அதனை நான் செய்வேன். சில தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளை […]

இலங்கை செய்தி விளையாட்டு

யாழ். மண்டைதீவு சர்வதேச மைதானக் கட்டுமானம் தீவிரம்; இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

  • December 29, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணம், மண்டைதீவில் அமையவுள்ள ‘யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின்’ (JICS) கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அண்மையில் நாட்டைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 48 ஏக்கர் பரப்பளவில், 10 ஆடுகளங்கள் மற்றும் 80 மீற்றர் தூர எல்லைக்கோடுகளுடன் உலகத் தரத்தில் இந்த மைதானம் நிர்மாணிக்கப்படுகிறது. 138 ஏக்கர் பரப்பளவிலான ‘விளையாட்டு நகரம்’ (Sports City) திட்டத்தின் ஒரு அங்கமாக […]

இலங்கை செய்தி

இலங்கை விமானப்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

  • December 29, 2025
  • 0 Comments

இலங்கை விமானப்படையின் புதிய ஊடகப் பேச்சாளராக குரூப் கெப்டன் நலின் வேவகும்புர நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 0112322130, 0772229270 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துவதனூடாக அவரை தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக முகவரி- ஊடக பணிப்பாளர், ஊடகப் பிரிவு, இலங்கை விமானப்படைத் தலைமையகம், பாதுகாப்புத் தலைமையக வளாகம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே.

உலகம் செய்தி விளையாட்டு

நைஜீரியாவில் ஜோஷுவா கார் விபத்து

  • December 29, 2025
  • 0 Comments

முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் ஆந்தனி ஜோஷுவா (Anthony Joshua), நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 29) நிகழ்ந்த கோர கார் விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். லாகோஸ் – இபாடன் அதிவேக நெடுஞ்சாலையின் மாகுன் பகுதியில் அவர் பயணித்த லெக்ஸஸ் ரக சொகுசு கார், வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆந்தனி ஜோஷுவாவின் கார் ஓட்டுநர் மற்றும் அவருக்கு […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் வீடொன்றில் தீ விபத்து – தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலி

  • December 29, 2025
  • 0 Comments

பாக்ஸிங் டே அன்று இங்கிலாந்தின் க்ளோசெஸ்டர்ஷயரின் (Gloucestershire) ஸ்ட்ரூட் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர் தந்தை வீட்டில் இருந்தபோதும் குளியலறை ஜன்னல் வழியாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஏழு வயது சிறுமி மற்றும் நான்கு வயது சிறுவனே தீ விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர். தாயின் சடலம் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குழந்தைகளின் சடலங்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கோயிலில் எப்போதும் தெய்வத்துக்கே முதல் மரியாதை-சென்னை உயர் நீதிமன்றம்

  • December 29, 2025
  • 0 Comments

‘கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை மரியாதை நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத் துறை தரப்பில், […]

இலங்கை செய்தி

நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – சீனாவிடம் விஜித முன்மொழிவு

  • December 29, 2025
  • 0 Comments

நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை சீனாவின் ஒரு நன்கொடையாக நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் இன்று (29) இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹாங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த முன்மொழிவை முன்வைத்தார். சீனா உள்ளிட்ட உலகளாவிய சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முனைப்பு காட்டி வரும் பின்னணியில் அமைச்சர் இதனை முன்மொழிந்துள்ளார். எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சார பேருந்துகளை இலங்கைக்கு […]

error: Content is protected !!