உலகம் செய்தி

மோசடி குற்றச்சாட்டு – லெபனானின் முன்னாள் நிதியமைச்சர் பிணையில் விடுதலை!

  • December 17, 2025
  • 0 Comments

கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த லெபனானின் முன்னாள் நிதியமைச்சர்  பிணையில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமின் சலாம் (Amin Salam) நேற்று $100,000 என்ற பிணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் ஆறு மாதங்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணம் செய்யவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சலாம் மீது மோசடி மற்றும் பொது நிதியை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட   குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் அந்த […]

இலங்கை செய்தி

13,781 வீடுகள் முழுமையாக சேதம்!

  • December 17, 2025
  • 0 Comments

டித்வா புயல் தாக்கத்தையடுத்து இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் 13 ஆயிரத்து 781 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் (101,055) பகுதியளவு சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பேரிடரால் 643 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் காணாமல்போயுள்ளனர் என பட்டியலிடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்து 96 குடும்பங்கள் தொடர்ந்து 723 இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

அரசியல் இலங்கை செய்தி

அவசர நிதிக்கான குறை நிரப்பு பிரேரணை நாளை சமர்ப்பிப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கை நாடாளுமன்றம் நாளை (18) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது. டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதியை பெறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காகவே விசேட சபை அமர்வு நடக்கின்றது. இதற்கமைய 500 பில்லியன் ரூபாவுக்கான குறைநிரப்பு பிரேரணை சபையில் முன்வைக்கப்படவுள்ளது என தெரியவருகின்றது. இந்த யோசனைக்கு எதிரணிகள் முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் இருந்தாலும், நாடாளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உள்ளமை […]

அரசியல் இலங்கை

பேரிடரால் மொத்த தேசிய உற்பத்தியில் 3 சதவீத இழப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

டித்வா புயலால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு 4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்தார். இவர் பொருளாதார நிபுணர் என்பதுடன், நிழல் நிதி அமைச்சராகவும் கருதப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. “ உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பே பேரிடர் இழப்பு பற்றி சரியான தகவலை குறிப்பிடலாம். எனினும், 3 முதல் 4 பில்லியன் டொலர்வரை இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கணிப்பாகும். […]

ஆஸ்திரேலியா உலகம்

சிட்னி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஷஸ் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு!

  • December 17, 2025
  • 0 Comments

சிட்னி போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளில் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸட் போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் இன்று ஆரம்பமானது. இதனைமுன்னிட்டு தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர். ஆயுதம் ஏந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். போட்டியை பார்வையிட வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு சமூக அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக உளவு […]

அரசியல் இலங்கை செய்தி

அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?

  • December 17, 2025
  • 0 Comments

அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சரிடம் வினவப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “ பேரிடர் காலகட்டத்தில் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை. பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா விதங்களிலும் உதவும் வகையிலேயே மேற்படி சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அச்சட்டம் எந்த சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக கையாளப்படவும் இல்லை. […]

உலகம் செய்தி

போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் 3 இந்திய மாணவர்களும் அடங்குவர்

  • December 16, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின்(Australia) சிட்னியின்(Sydney) போண்டி(Bondi) கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த 40 பேரில் மூன்று இந்திய மாணவர்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாணவர்களில் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தி ஆஸ்திரேலியா டுடே(The Australia Today) செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக காயமடைந்த இந்திய மாணவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தொடர்புடைய செய்தி அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூடு – துப்பாக்கிதாரி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்

செய்தி விளையாட்டு

ஐ.சி.சியின் நவம்பர் மாத சிறந்த வீரர்களாக ஹார்மர் மற்றும் ஷஃபாலி வர்மா தெரிவு

  • December 16, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ICC) இந்த ஆண்டின் நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை பட்டியலை கடந்த வாரம் அறிவித்தது. இந்நிலையில், கடந்த மாதத்துக்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டவர்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அந்தவகையில், இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தனது உத்வேகமான பந்துவீச்சிற்காக தென்னாப்பிரிக்க(South Africa) சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர்(Simon Harmer) ஆண்கள் விருதை வென்றுள்ளார் மேலும், ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 […]

உலகம் செய்தி

மேற்குக் கரைக்குள் நுழைய கனடா பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அனுமதி மறுப்பு

  • December 16, 2025
  • 0 Comments

பாலஸ்தீன(Palestine) அதிகாரிகள் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை அடைய முயன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 கனேடியர்கள்(Canadian) குழுவிற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்துள்ளதாக கனேடிய சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளது. கனடாவின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்டை நாடான ஜோர்டானில்(Jordan) இருந்து மேற்குக் கரையை அடைய முயன்றபோது இஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களைத் திருப்பி அனுப்பினர் என்று கனேடிய முஸ்லிம்களின் தேசிய கவுன்சில்(NCCM) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட ஆறு […]

உலகம் செய்தி

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பிரபல வங்கதேச பத்திரிகையாளர்

  • December 16, 2025
  • 0 Comments

நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் டாக்கா(Dhaka) பெருநகர காவல்துறையினரால் வங்கதேச(Bangladesh) பத்திரிகையாளர் அனிஸ் ஆலம்கீர்(Anis Alamgir) கைது செய்யப்பட்டுள்ளார். டாக்காவில் உடற்பயிற்சி கூடத்திலிருந்து வெளியேறிய பிறகு, ஆலம்கீரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தர பாசிம்(Uttara Paschim) காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், பத்திரிகையாளர் பலத்த பாதுகாப்பின் கீழ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகள் மூலம் நாட்டை சீர்குலைக்கவும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை மீண்டும் […]

error: Content is protected !!