இந்தியா செய்தி

பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் திகதி அறிவிப்பு

  • August 30, 2024
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் முதல் வாரத்தில் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் முக்கியமானதாக இருக்கும். “பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 5, 2024 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார்” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். “தலைவர்கள் இந்தியா-சிங்கப்பூர் மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை […]

இலங்கை செய்தி

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ் இளைஞன் உயிரிழப்பு

  • August 30, 2024
  • 0 Comments

வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா – மன்னார் வீதியில், பூவரசன்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று (30) மாலை இவ் விபத்து இடம்பெற்றிருந்தது. மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த கூலர் ரக வாகனமும் வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் பூவரசன்குளம், குருக்கள் புதுக்குளம் பகுதியில் பயணித்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் மோட்டார் […]

இலங்கை செய்தி

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

  • August 30, 2024
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை செய்தி

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் போராட்டம்

  • August 30, 2024
  • 0 Comments

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தினமான இன்றைய தினம் ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பேரணி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆரிய குளம் சந்தியில் காலை 11 மணியளவில் ஆரம்பமான பேரணி பருத்தித்துறை வீதி – ஆஸ்பத்திரி வீதி – காங்கேசன்துறை வீதி ஊடாக முனியப்பர் கோவிலடியை அடைந்தது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பேரணி இடம்பெற்றது. பேரணியின் போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் […]

உலகம்

தாய்லாந்தில் சுரங்கப் பாதையில் சிக்கி 3 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி

தாய்லாந்தில் சுரங்கப் பாதை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சுரங்கப்பாதை தாய்-சீன அதிவேக இரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாங்காக்கிலிருந்து வடகிழக்கே 250 கிலோமீட்டர் (155 மைல்) தொலைவில் உள்ள நாகோன் ராட்சசிமா மாகாணத்தில் இந்த சுரங்கப்பாதை உள்ளது. அத்தொழிலாளர்கள் சுரங்கப் பாதையில் வேலை செய்துகொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, இரண்டு சீனர்களும் மியன்மாரைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக தகவல் […]

விளையாட்டு

SLvsENG – இரண்டு சதங்களுடன் 427 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து

  • August 30, 2024
  • 0 Comments

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் […]

வட அமெரிக்கா

சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : கமலா ஹாரிஸ்

  • August 30, 2024
  • 0 Comments

நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைவோருக்கு எதிராகக் கடுமையாக நடந்துகொள்ளப் போவதாகவும் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை ஆதரிக்கப்போவதாகவும் அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் சூளுரைத்து உள்ளார். அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஆன பின்னர் முதல்முறை தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற ஹாரிஸ், அமெரிக்காவின் தென்பகுதி எல்லை வாயிலாக சட்டவிரோதமாகக் குடியேறும் விவகாரத்தின் மீது கவனம் செலுத்த இருப்பதாகக் கூறினார். எல்லை தொடர்பாக விரிவான சட்டமியற்றும் நடவடிக்கையை மீண்டும் தொடங்க இருப்பதாகவும் சிஎன்என் தொலைக்காட்சியிடம் அவர் தெரிவித்தார்.எல்லை தாண்டி […]

இந்தியா

இந்தியாவில் தன்னை கடத்தியவரைப் பிரிய மனமின்றி கதறி அழுத குழந்தை !!

  • August 30, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேச மாநிலத்தின் யமுனை நதிக்கரையில் நடந்த ஒரு சம்பவத்தின் காணொளி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தன்னைக் கடத்தியவரைப் பிரிய மனமின்றிக் குழந்தை ஒன்று கதறி அழுவதைக் காட்டும் காணொளி அது. ஆக்ரா நகரைச் சேர்ந்தவர் தனுஜ் சாஹர். தலைமைக் காவலராகப் பணியாற்றிய அவர் காவல்துறையிலிருந்து தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்பட்டார். தனுஜ் சாஹர், உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையின் சிறப்புப் பிரிவு, கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் […]

ஆசியா

பிலிப்பீன்ஸ், வியட்னாம் இடையே பாதுகாப்பு உடன்படிக்கை

  • August 30, 2024
  • 0 Comments

பிலிப்பீன்சும் வியட்னாமும் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதாக பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தெரிவித்துள்ளார்.தென்சீனக் கடலில் சீனாவின் செயல்களுக்கு நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்துவரும் அவ்விரு நாடுகளும் மேற்கொள்ளும் முக்கிய நடவடிக்கை அது என்றார் அவர். வியட்னாமியத் பாதுகாப்பு அமைச்சர் ஃபான் வான் கியாங், ஃபிலிப்பீன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கில்பெர்டோ தியோடொரொவுடன் பேச்சு நடத்த வெள்ளிக்கிழமை மணிலாவில் இருந்தார். அதற்கு முன்னர் அவர் மார்கோசையும் சந்தித்தார். “இப்போது நாம் தற்காப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார் […]

ஐரோப்பா

கார்கிவ் மீது ரஷ்ய தீவிர தாக்குதல்: 4 பேர்பலி! 28 பேர் படுகாயம்

உக்ரைனின் வடகிழக்கு நகரமான கார்கிவ் மீது ரஷ்யாவால் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் குடியிருப்பு கட்டிடம் மற்றும் விளையாட்டு மைதானத்தில் மோதியதில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். மற்றும் குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதலின் விளைவாக 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பிடித்த நிலையில் மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என அவர் மேலும் கூறினார். வெள்ளியன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய இராணுவ விமானத் தளங்கள் மீது நீண்ட […]

error: Content is protected !!