இலங்கை

ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்: மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை

  • September 30, 2023
  • 0 Comments

கால்நடைகள் என்பது வெறும் உயிர் அல்ல.அது உணவளிக்கும் ஒரு உயிரினம். அதன் இடங்களை அபகரித்து அதனை வீதிகளில் திரிவதை யாரும் அனுமதிக்கமாட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் எமது பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்தி எமது பிரச்சினைகளை தீர்க்கமுன்வர வேண்டும் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி 16வது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் […]

இலங்கை

திருகோணமலை – 2022ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

  • September 30, 2023
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ். குகதாசன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. கணிதம்,உயிரியல் விஞ்ஞான,பொறியியல் தொழில்நுட்ப ,விஞ்ஞான தொழில்நுட்ப, கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடங்களைப்பெற்ற மூவின மாணவர்கள் ஆறு பேருக்கும்,2021 ம் ஆண்டு இவ் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 41 மாணவர்களுக்கும் […]

இலங்கை

கிளிநொச்சியில் நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி!

  • September 30, 2023
  • 0 Comments

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, ஹபராதுவ, கடலுவ பாலத்திற்கு அருகில் உள்ள வாவியில் நீராடச் சென்ற குழந்தையொன்றும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரண்டு குழந்தைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஒரு குழந்தை உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டதாகவும் […]

ஆசியா

பாகிஸ்தான்:TV விவாத நிகழ்ச்சியில் கைகலப்பில் ஈடுபட்ட அரசியல் விமர்சகர்கள்

  • September 30, 2023
  • 0 Comments

பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாதத்தின் போது இம்ரான் கான் யூதர்களின் ஏஜென்ட் என விமர்சித்ததால் நேரலையில் கைகலப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில், இம்ரான் கான் வழக்கறிஞர் ஷெர் அப்சல் கான் மார்வாட், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி சார்பில் அதன் செனட்டர் அப்னான் உல்லா கான் உட்பட சில முக்கியக் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, இம்ரான் கான் […]

இலங்கை

சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் க.சிவனேசன்

  • September 30, 2023
  • 0 Comments

இலங்கையை விட்டு வெளியேறுகின்ற சூழல் இருக்கின்றது என்றால் சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டும் என முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலும் இலங்கையின் நீதித்துறை தொடர்பிலும் இன்று (30.09.2023) முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இலங்கையின் நீதித்துறையினை பொறுத்தமட்டில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் இலங்கையின் வரலாற்றில் நீதித்துறையில் சார்பு நிலை என்பது […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமான செயலில் ஈடுபட்டு வந்த விலங்கியல் நிபுணர்!

  • September 30, 2023
  • 0 Comments

40ற்கும் மேற்பட்ட நாய்களை சாகும் வரை பலாத்காரம் செய்து அவை தொடர்பான வீடியோக்களை டார்க் இன்டர்நெட்டில் பதிவேற்றிய விலங்கியர் நிபுணர். 51 வயதாகும் ஆடம் பிரிட்டன் BBC மற்றும் நேஷனல் ஜியோகிராஃபிக் ஆகியவற்றின் தயாரிப்புகளில் பணியாற்றிய விலங்கியல் நிபுணர் ஆவார். வட ஆஸ்திரேலியாவில் உள்ள சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் கல்விப் பணியிலும் ஈடுபட்டிருக்கிறார். முதலைகளை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் ’முதலை’ மனிதர் என்றும் பரவலாக அறியப்படுகிறார். ஆனால் எவரும் அறியாத இன்னொரு முகம் […]

இலங்கை

அமெரிக்க குடியுரிமை குறித்து பசில் வெளியிட்டுள்ள கருத்து!

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்பு இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும், கட்சியாக வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக வெளிப்பட்டு வருவதாகவும், மற்றபடி வேட்பாளர் யார் என்பதை இன்னும் […]

இலங்கை

இராணுவ வீரர்களை குறைக்க திட்டமிடும் இலங்கை!

  • September 30, 2023
  • 0 Comments

2030ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டு இலட்சத்தைத் தாண்டியிருக்கும் ராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களை பாதியாகக் குறைப்பதே அரசின் இலக்காகும். இதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக குறைக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் குறிப்பிடுகின்றார். கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க உத்தேசித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை

சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்படுமா? : இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பாராம்!

  • September 30, 2023
  • 0 Comments

சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 ஒக்டோபர் மாதம் கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் குறித்த கப்பலானது,  இலங்கையை நோக்கிப் பயணிக்கிறது என்றும்,  இலங்கைக்குள் பிரவேசிப்பது தொடர்பில் இலங்கை கலவையான சமிக்ஞைகளை வெளியிட்டுள்ளதாகவும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த அனுமதியில்லை என தெரிவித்திருந்த போதிலும், இறுதி தீர்மானத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் – து.ரவிகரன்

  • September 30, 2023
  • 0 Comments

சர்வதேசம் இலங்கை அரசாங்கத்தினுடைய போக்குகளிற்கு பொறுப்பு கூற வைக்க வேண்டும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகல் தொடர்பாக இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளதாக தற்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டு கொண்டு இருக்கிறது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மற்றும் […]