ஜப்பான் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர உதவி
டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு 2.5 மில்லியன் டொலர் அவசர மானியத்தை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.
உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய அன்றாடத் தேவைகள் உட்பட சர்வதேச உதவி நிறுவனங்கள் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க இந்த மானியம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக நாடு முழுவதும் 600 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விரைவான மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பை உறுதி செய்வதற்காக ” நீண்டகால நண்பரான இலங்கைக்கு தடையற்ற ஆதரவை” தொடர்ந்து வழங்கும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
இரண்டு வார காலப்பகுதியில் சுமார் 1,250 மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய பின்னர் ஜப்பானிய பேரிடர் நிவாரண மருத்துவக் குழு இலங்கையில் இருந்து புறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





