இலங்கை

இலங்கையில் சிறுவனின் உயிரை பறித்த புத்தாண்டு நிகழ்வு

அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்றிருந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

10 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

15 வயதான தமது சகோதரருடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருந்த குறித்த சிறுவன் ஓடிக் கொண்டிருந்த நிலையில் கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர் கலாவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!