இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை

இலங்கையில் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாமல் சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களின் குரலை நசுக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயக விரோத செயற்பாடு என ட்விட்டர் செய்தியூடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக இலங்கை மக்களின் உரிமை மீறப்படுவதாக அமெரிக்க செனட் சபையின் வௌியுறவு குழு சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 13 times, 1 visits today)