இலங்கை செய்தி

இலங்கையில் அச்சுறுத்தலாக மாறும் போலி வைத்தியர்கள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக செயற்படுவதாக தகவல் வெளிவந்த ஒரு வாரத்தில் மீண்டும் அவ்வாறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பயாகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் போலி வைத்தியராகக் காட்டிக்கொண்டு மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ மனையை முன்பு நடத்தி வந்த மருத்துவர் கடந்த ஜூலை மாதம் வெளிநாடு சென்றார்.

அதன் பிறகு மருத்துவ மனையை மருத்துவரின் தந்தை நடத்தி வந்தார். சந்தேகநபர் மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

(Visited 34 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை