செய்தி வட அமெரிக்கா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 மாத குழந்தை மரணம்: உடற்கூறு ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் உண்மை!

கனேடிய நகரமொன்றில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை ஒன்று உயிரிழந்தது.

மார்ச் மாதம் 7ஆம் திகதி, ஆல்பர்ட்டாவிலுள்ள Stollery மருத்துவமனையில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று அனுமதிக்கப்பட்டது.பின்பு 11ஆம் திகதி அந்தப் பெண் குழந்தை இறந்துபோனாள்.

மருத்துவர்கள் அந்தக் குழந்தையின் உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டபோது, அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று தெரியவந்தது.அந்த குழந்தை அடிபட்டதால், அதாவது கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்திருந்தாள். ஆகவே, அதை கொலை வழக்காக கருதி பொலிஸார் விசாரணை மேற்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.

அந்தக் குழந்தையைத் தாக்கியது யார், அந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்த எந்த விவரங்களையும் பொலிஸார் வெளியிடவில்லை.

(Visited 3 times, 1 visits today)

dhivyabharathy

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!