ஜப்பான் கோவில்களில் ‘ரோபோ’ துறவி!
ஜப்பானில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ‘ரோபோ’ துறவியை கியோட்டோ (Kyoto) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மனிதர்களை போல இரண்டு கால்களை கொண்ட இந்த ரோபோ, கோவில்களில் மந்திரங்களை ஓதுவதுடன் மதச்சடங்குகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்த மதத்தின் மிகக் கடினமான புனித நூல்களை கூட இந்த ரோபோ கற்றுத் தேர்ந்துள்ளதுடன், எதிர்காலத்தில் மனிதத் துறவிகளுக்குப் பதிலாக இந்த AI ரோபோ துறவிகளே ஆன்மிகப் பணிகளை முன்னின்று நடத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.







