உக்ரைனில் தேர்தலை அறிவிக்க தயாராகும் ஜெலென்ஸ்கி : ஆட்சி மாற்றம் போரை தணிக்குமா?
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், தேர்தல் மற்றும் வாக்கெடுப்பை அறிவிக்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
மோதலின் நான்காவது ஆண்டு நிறைவான பிப்ரவரி 24 அன்று இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஒரு சமாதான ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கா ஜூன் மாதம் காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஆட்சி மாற்றம் சாதகமான நிலைமையை கொண்டுவரும் என நிபுணர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் டொன்பாஸ் பிராந்தியத்திலிருந்து உக்ரைன் விலக வேண்டும் என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது, இந்த நிபந்தனையை கியேவ் சந்தேகத்திற்கு இடமின்றி நிராகரித்துள்ளது.
இதற்கிடையே கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான போக்குவரத்து மையமான போக்ரோவ்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





