உலகம் செய்தி

உக்ரைன் ஜனாதிபதி வளைகுடா நாடுகளுக்கு அவசர விஜயம்!

உக்ரைன் ஜனாதிதி Volodomyr Zelensky கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு தற்போது பயணம் மேற்கொண்டுள்ளார்.

ரஷ்யாவுடனான போரில் தமது நாடு பெற்ற ட்ரோன் தொழில்நுட்ப அறிவை பகிர்ந்து கொள்ளும் வகையிலேயே அவர் பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரியவருகின்றது.

இதற்குப் பிரதிபலனாக, உக்ரைனின் வான் பாதுகாப்புக்குத் தேவையான நிதி மற்றும் ஆயுத உதவிகளை செல்வந்த நாடுகளிடமிருந்து திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கவனம் மத்திய கிழக்கு போரின் பக்கம் திரும்பியுள்ளதால், உக்ரைன் தனது பாதுகாப்பை உறுதி செய்ய புதிய நட்பு நாடுகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த ராஜதந்திர நகர்வு உக்ரைன் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!