பொழுதுபோக்கு

பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததால் சிறைக்கு செல்லும் இர்பான்?

பிரபல யூடியூபர் இர்பான் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால், அவர் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரபல யுடியூப்பர் இர்பான் ஹோட்டல்களில் உணவு தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். தமிழகத்திலுள்ள youtube சேனல்களில் இவர் தான் அதிக அளவு வருமானத்தை ஈட்டி வருகிறார்.

இவரது கண்டெண்டுகள் சிறப்பாக இருக்கும், வெளிநாடுகளில் சென்று உணவு சாப்பிட்டு அந்த நாட்டின் உணவுகள் தொடர்பாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் அவரது சேனலை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், யூடியூபர் இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content