இலங்கை

சடலம் மீது சேட்டை செய்த இளைஞர்களினால் ஏற்பட்ட பதற்றம்!

குளியாபிடிய உள்ள நகரப் பகுதியில் பொசோன் தினத்தை முன்னிட்டு “பேய் வீடு“ ஒன்றை அங்குள்ள ஒருவர் நிர்மாணித்திருக்கிறார்.

இந்த பேய் வீட்டில் சவப்பெட்டி ஒன்று வைக்கப்பட்டு அதில் சடலம் போல ஒருவரை படுக்க வைத்திருக்கிறார்கள்.

அந்த சடலம் திடிரென எழுவதும், பின்னர் படுத்துக்கொள்வதுமாக இருந்துள்ளது. இந்த பேய் வீட்டை பார்க்க மக்கள் அதிகளவில் வந்துள்ளனர்.

இப்படி அங்கு வந்த இளைஞர் குழு ஒன்று, சடலம்போல பேய் வீட்டில் படுத்திருந்தவரிடம் சேட்டை செய்துள்ளனர்.

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த சடலமாக படுத்திருந்தவர் இளைஞர்களை தாக்க, இளைஞர்களும் திருப்பித் தாக்கியதால் அங்குப் பதற்ற நிலையொன்று ஏற்பட்டது.

பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளதைத் தொடர்ந்து சடலமாக நடித்த நபரையும், சேட்டை செய்த இளைஞர் குழுவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“பேய் வீட்டைப் பார்வையிட நேற்று முன்தினம் வந்தவர்களும், எனது மூக்கை இருக்கமாகப் பிடித்து மூச்செடுக்க விடாமல் செய்தார்கள்.

அதுபோல நான் உண்மைக்கும் இறந்துவிட்டேனா என்பதை பார்க்க எனது கண்ணத்தில் அறைந்தார்கள். நானும் பொறுமையை இழந்து அவர்களை தாக்கினேன்” என சடலமாக நடித்த நபர் பொலிஸாரிடம் கூறியிருக்கிறார்.

இம்முறை சாதாரணத்தரப் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவனே இவ்வாறு சடலமாக நடித்துள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார், இருதரப்பினரையும் பொலிஸார், பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!