இந்தியா செய்தி

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

அத்துடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பமானது.

கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வந்தே மாதரம் விவகாரம், திருப்பரங்குன்றம் சர்ச்சை ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.

குறிப்பாக, 20 ஆண்​டு​கள் பழமை​யான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​துக்கு மாற்​றாக, புதிய ஊரக வேலை உறுதி திட்ட சட்டமூலம் மக்களவையில் நேற்று நிறைவேறியது.

இந்த சட்டமூலத்துக்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடக்​கம் முதல் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன.

பின்னர், நாட்​டில் அணுமின் உற்​பத்​தியை அதி​கரிக்​கும் நோக்​கில், அணுசக்​தித் துறையை தனி​யாருக்கு திறந்​து​விட மத்​திய அரசு தீர்மானித்துள்ளது.

இதற்​காக ‘இந்​தி​யா​வின் மாற்​றத்​துக்​கான அணுசக்தி மேம்​பாட்டு சட்டமூலம் நிறைவேற்​றப்​பட்​டது. இதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. மேலும், மக்களவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!