இலங்கை

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராகும் அர்ச்சுனா?

2029 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகும் அளவுக்கு தன்னை பிரபலமாக்குவதாக சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

“நாட்டிலே வடக்கு, கிழக்கு என்ற ஒரு பகுதி இருப்பதை தற்போதைய அரசாங்கம் மறந்து விட்டது. வடக்கு, கிழக்கு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை விடயங்களை வழங்கி விட்டு பிச்சை போட்ட எண்ணத்தில் அரசாங்கம் திரிகிறது.

தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே ஒற்றிமையின்மையே இதற்கான காரணம். இதனால் எதிர்வரும் நாட்களில் தமிழ் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட தீர்மானித்துள்ளேன்.

வடக்கு, கிழக்கில் அபிவிருத்திகள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வலியுறுத்தியுள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!