பொழுதுபோக்கு

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? காரணம் வெளியானது

அரண்மனை 4 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது பற்றி சுந்தர் சி விளக்கம் அளித்துள்ளார்.

அரண்மனை படத்தின் முதல் பாகத்தை கடந்த 2014-ம் ஆண்டு இயக்கினார் சுந்தர் சி. அப்படத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், வினய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அதன் இரண்டாம் பாகத்தை 2016-ம் ஆண்டு இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி.

அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்சிகா, திரிஷா, பூனம் பாஜ்வா ஆகியோருடன் சூரி, சித்தார்த், சுந்தர் சி ஆகியோரும் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

அரண்மனை முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூலை வாரிக்குவித்ததால் அப்படத்தின் மூன்றாம் பாகத்தை கடந்த 2021-ம் ஆண்டு இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி.

இதில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.

இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இப்படத்தின் திரைக்கதை அமையாவிட்டாலும் பேமிலி ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பால் அரண்மனை 3-ம் பாகமும் ஹிட் ஆனது.

இதையடுத்து தற்போது அப்படத்தின் நான்காம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார் சுந்தர் சி. இதில் ராஷி கண்ணா மற்றும் தமன்னா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். சுந்தர் சி-யே இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், அரண்மனை 4 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சுந்தர் சி, இப்படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி தான் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தாராம்.

ஆனால் அந்த சமயத்தில் ஷூட்டிங் தாமதம் ஆனதால் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டு அவர் இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறிய சுந்தர் சி. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் காரணமாகவே தான் இப்படத்தில் ஹீரோவாக நடித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content