புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

கூலி படத்தில் மிரட்டிய ரச்சிதா ராம்… யார் இவர்?

கன்னட சினிமாவில் தனது திறமையால் ரசிகர்களின் இதயங்களை கைப்பற்றிய ரச்சிதா ராம், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய கூலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து ஒரே நாளில் ட்ரெண்டாகி வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிய கூலி படம் ரச்சிதாவுக்கு நல்ல வரவேற்பை அள்ளித்தந்துள்ளது.

கூலியில் கல்யாணி என்ற நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அசர வைத்துள்ளார். யார் இந்த ரச்சிதா என்பதுதான் தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

நடிகை ரச்சிதா ராம், “டிம்பிள் குயின்” எனக் கன்னட சினிமாவில் அழைக்கப்படுகிறார். இவர் 1992 அக்டோபர் 3-ல் பெங்களூரில் பிறந்தார்.

ரச்சிதாவின் தந்தை கே.எஸ். ராம் பாரதநாட்டிய கலைஞர் ஆவார். ரச்சிதா 2011-ல் Benkiyalli Aralida Hoovu என்ற டெலிவிஷன் தொடரில் அறிமுகமானார். 2013-ல் புல் புல் என்ற படத்துடன் திரையில் அறிமுகமான இவர், தற்போது 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், பாரதநாட்டியத்தில் பயிற்சி பெற்று 50க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனக் கலையை வெளிப்படுத்தியுள்ளார்.

கூலி படம் ரச்சிதாவின் கோலிவுட்டில் முதல் படமாகும்.

கூலி படத்தில் காலீஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும், இயக்குனருமான உபேந்திராவுடன் ஐ லவ் யூ படத்தில் இணைந்து நடித்துள்ளார் நடிகை ரச்சிதா ராம். கூலி படத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஆமிர்கான், சௌபின் ஆகிய பெரும் நட்சத்திரங்களுடன் கதையின் முக்கிய அங்கமாக மாறி ட்ரெண்டாகி வருகிறார் ரச்சிதா ராம். இன்னும் பல புதிய படங்களில் நடிக்க கமிட் ஆவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

 

(Visited 20 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்