பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணங்களிலிருந்து £150 விலை குறைப்பு
எரிசக்தி கட்டணங்களிலிருந்து £150 பவுண்ட் விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக
வழங்கப்படுவதாக நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்துள்ளார்.
பெப்ரவரி மாத பணவீக்க புள்ளிவிபரங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விலை உயர்வை எதிர்கொள்ளும் மக்களுக்கு ஆதரவையும், உணவு மற்றும் தேவையான பொருட்களின் விலை
அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
நிறுவன நிர்வாகத் தடைகளை குறைத்து நீண்டகால எரிசக்தி பாதுகாப்பையும் மேம்படுத்தி, வலுவான மற்றும் பாதுகாப்பான
பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ரீவ்ஸ் கூறியுள்ளார்.
தங்களிடம் சரியான பொருளாதாரத் திட்டம் உள்ளதென்றும் நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.




