பிரித்தானியாவில் அதிகரிக்கப்படும் ஊதியம் – அரை மில்லியன் தொழிலாளர்கள் பயன்பெறுவர்!

இங்கிலாந்தில் ஒரு மணித்தியாலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பானது அரை மில்லியன் தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவிப்பின்படி ஒருமணி நேரத்திற்கு வழங்கப்படும் ஊதியமானது £13.45 பவுண்ட்ஸ் ஆகவும் லண்டனில் £14.80 பவுண்ட்ஸ் ஆகவும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய லண்டனில் 95 பென்ஸ் அதிகரிக்கப்படும் அதேவேளை பிற இடங்களில் 85 பென்ஸ் அதிகரிக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையின் அடிப்படையில் ஊதிய உயர்வை கணக்கிடும் அறக்கட்டளை, முழுநேரமாக வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஆண்டிற்கு £2,418 பவுண்ட்ஸும், லண்டனில் பணிப்புரியும் ஒருவர் £5,050 பவுண்ட்ஸும் அதிகமாக பெறுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.
குறைந்த ஊதியம் பெறும் பல தொழிலாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க சிரமப்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி சுட்டிக்காட்டியுள்ள நிலையில், வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கும் வகையில் இந்த ஊதிய உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.