ஜப்பானில் திடீர் தேர்தலின் வாக்குப்பதிவுகள் நிறைவு – ஆளும் கட்சி வெற்றிப்பெற வாய்ப்பு!
ஜப்பானில் பிரதமர் சானே தகைச்சி அழைப்பு விடுத்திருந்த திடீர்த் தேர்தலின் வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
தகைச்சியின் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) ஒரு தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் முதல் பெண் பிரதமரான தகைச்சி கட்சித் தலைவராக ஆன நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த திடீர் தேர்தலை அறிவித்தார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி (LDP) பெரும்பான்மையை இழந்துள்ளது. அத்துடன் கோமைட்டோ கட்சியுடனான கூட்டணியும் சரிந்துள்ளது.
இதனால் பெரும்பாலானவர்கள் இந்த தேர்தலை சூதாட்டம் என்றே அழைக்கிறார்கள். NHK ஒளிபரப்பாளரின் கருத்துக் கணிப்பின்படி, LDP போட்டியில் 328 இடங்களில் 274 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





