ஆசியா

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறை – பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி!

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் பணவீக்கம் ஏற்பட்டு கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலை உயர்வை கண்டித்தும், மேல்தட்டு மக்களுக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்ய கோரியும் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்டனர்.

தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பொதுமக்கள் தாக்கியதால் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 78 பொலிஸார் உள்பட 100 பேர் படுகாயம் அடைந்தனர்.இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்காரர்களை பொலிஸார் கலைத்தனர்.

பின்னர் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே பிராந்தியத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பான அவசர கூட்டத்துக்கு அதிபர் ஆசிப் ஆலி சர்தாரி அழைப்பு விடுத்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!