பொழுதுபோக்கு

விஜய்க்காக ஊரெல்லாம் சுற்றும் புஸ்ஸி ஆனந்த்..

மக்களின் தேவைகளை பார்த்து பார்த்து பூர்த்தி செய்து வரும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக புஸ்ஸி மாவட்ட ரீதியாக சென்று உறுப்பினர்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் நாமக்கல், ஈரோடு, மதுரை போன்ற பல மாவட்டங்களில் போயிட்டு வந்த புஸ்ஸி தற்போது திருப்பூர் பக்கமும் தலையைக் காட்டி இருக்கிறார்.

அங்கே பேசிய புஸ்ஸி, கட்சியில் சேர வேண்டும் என்றால் சில கட்டளைகள் இருக்கிறது என்று கூறி வெறும் பேருக்காகவும் புகழுக்காகவும் யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. உண்மையாக மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று நினைத்து நன்றாக கடின உழைப்பை காட்டுபவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் இடம் உண்டு என்பதை தெரிவித்திருக்கிறார்.

அதாவது திருப்பூர் முதன்மைபாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட புஸ்ஸி ஆனந்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்பொழுது நிர்வாகிகளிடம் பேசிய அவர் திருப்பூர் மாவட்ட 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நமது தமிழக வெற்றிக் கழக கொடி பறக்க விட வேண்டும்.

அதற்கு நாம் அனைவரும் கடின உழைப்பை கொடுக்க வேண்டும். அந்த வகையில் போஸ்டர் ஒட்டி, கொடி பிடித்து கட்சிக்காக உழைக்க வேண்டும். அப்படிப்பட்ட உறுப்பினர்களை நிச்சயமாக தமிழக வெற்றி கழகம் கைவிடாது என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து கூடிய விரைவில் உங்களை சந்திப்பதற்கு தளபதி விஜய் அவர்களும் நேரில் வருவார் என்று கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து கரூரில் பேசிய பொழுது,

கட்சிக்காக முழு மனதுடன் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும். அத்துடன் மக்களின் குறைதீர்க்கும் வகையில் இப்பொழுதிலிருந்து அவர்களுடைய கஷ்டத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு விஷயங்களிலும் நாம் ஈடுபட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை நம் கட்சியின் மீது ஏற்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content