பொழுதுபோக்கு

ஜேசன் சஞ்சய்யை எக்கச்சக்கமாக புகழ்ந்த ஹீரோ

தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான தளபதி விஜய் விரைவில் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு முழுமையாக குட்பை சொல்லிவிட்டு, முழுநேர அரசியல் தலைவராக களமிறங்கவிருக்கிறார்.

தளபதி விஜய் திரையுலகையை விட்டு விலகும் இந்த நேரத்தில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய திரையுலக பயணத்தை இயக்குனராக இப்போது தொடங்கி இருக்கிறார்.

வெளிநாடுகளுக்கு சென்று சினிமா சம்பந்தமான படிப்புகளை படித்து திரும்பி இருக்கிற ஜேசன் சஞ்சய், ஏற்கனவே ஒரு சில குறும்படங்களை எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த சூழலில் பிரபல லைக்கா நறுமணம் தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அவர் பணியாற்றவிருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சந்தீப் கிசன் நாயகனாக நடிக்க உள்ள நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகளில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் கமிட்டானது குறித்தும் இந்த திரைப்படத்தின் கதை குறித்தும் விவரித்து இருக்கிறார் இப்படத்தின் நாயகன் சந்தீப் கிசன்.

நேற்று ஜேசன் சஞ்சய்யின் முதல் திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியான பிறகு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தீப் கிசன், தனுஷின் ராயன் பட படபிடிப்பிற்கு முன்னதாகவே நானும் ஜேசனும் இந்த திரைப்படம் குறித்து விவாதித்தோம். இது முழுக்க முழுக்க ஆக்ஷனும், Funணும் கலந்த ஒரு என்டர்டெய்னர் திரைப்படமாக நிச்சயம் இருக்கும்.

கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் இந்த திரைப்படத்தை பற்றி என்னிடம் அவ்வளவு விரிவாக ஜேசன் விலக்கியது என்னை பிரமிக்க வைத்தது. அவர் மிகச் சிறந்த இயக்குனராக மாறவிருக்கிறார் என்பதை அவருடைய கதை சொல்லும் விதமே எனக்கு தெரிவித்தது.

பான் இந்தியா அளவில் இந்த திரைப்படம் இருக்கும், அவருடைய முதல் படத்தில் நான் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகள் துவங்க இருக்கிறது. ஒரு இயக்குனராக தன்னை மெருகேற்றி உள்ள ஜேசன் சஞ்சய் மிகச் சிறந்த திரைப்படத்தை கொடுப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

 

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்