பொழுதுபோக்கு

பிரஷாந்திற்காக விஜய் செய்யப்போகும் அந்த விஷயம் – 24ஆம் திகதி எதிர்பாருங்கள்…

நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த் இணைந்துள்ளமை அனைவரும் அறிந்ததே.

கோட் படம் வரும் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மூன்றாவது பாடல் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனித்தனியாக பிரஷாந்த், பிரபுதேவா ஆகியோர் படங்களில் ஹீரோக்களாக நடித்துவரும் சூழலில் எந்தவித ஈகோவும் இல்லாமல் விஜய்யுடன் கோட் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் கோட் படத்தின் ஷூட்டிங்கின்போது விஜய் மற்றும் பிரஷாந்திடையில் மிக நெருக்கமான நட்பு உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோட் படத்திற்கு பிறகு விஜய் மீது மிகுந்த மதிப்பு கொண்டவராக பிரஷாந்த் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரசாந்த் நடிப்பில் ஹீரோவாக நடித்துள்ள அந்தகன் படத்தின் பாடல் ஒன்றை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையிலான நெருங்கிய நட்பிற்கு சான்றாகவே இந்த விஷயம் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரஷாந்த்தின் அந்தகன் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. நீண்ட காலங்களுக்கு பிறகு பிரசாந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவரது அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான தியாகராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!