தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்த வைரமுத்து

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களுக்கு வரிகள் எழுதி இருக்கிறார். அவர் தற்போது தன் மீது வைக்கப்படும் ஒரு புகார் பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
சின்மயி சொன்ன புகார் பற்றி எல்லாம் அவர் விளக்கம் கொடுக்கவில்லை, இது வேறொரு புகார். அவர் எழுதும் பாடல் வரிகளை மாற்றி கொடுக்கமுடியாது என கூறுவதாக சொல்லும் புகார் பற்றி தான் வைரமுத்து பேசி இருக்கிறார்.
“என்மீது ஒரு பழிஉண்டு, பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்.”
“பாட்டுவரியின் திருத்தத்தைப் பொருளமைதியே தீர்மானிக்கிறது; நானல்ல ஆனால் பழி என்மீதே வருகிறது
புன்னகை மன்னன், மனிதன் ஆகிய படங்களில் வரும் பாடல்களை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு வைரமுத்து இது பற்றி பேசி இருக்கிறார். அவரது பதிவு இதோ.