உலகம்

ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறிய அமெரிக்க இராணுவம்!

மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானத் தளத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளதாக  ஈராக்கிய அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஈராக்கில் இஸ்லாமிய அரசு குழுவை எதிர்த்துப் போராடும் அமெரிக்கத் தலைமையிலான பணியை செப்டம்பர் 2025 க்குள் முடிக்க வொஷிங்டனுக்கும் – பக்தாத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஈராக்கில் நிலைக்கொண்டுள்ள  அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்.

அசல் திட்டத்தின்படி அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றாலும் சிரியாவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள்” 250 முதல் 350 ஆலோசகர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட ஒரு சிறிய பிரிவை தற்காலிகமாக தக்கவைத்துக் கொள்ள வழிவகுத்துள்ளது.

இதனை ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி (Mohammed Shia al-Sudani) உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அனைத்து அமெரிக்கப் பணியாளர்களும்  முழுமையாக வெளியேறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வெளியேறியதை தொடர்ந்து ஈராக்கிய இராணுவத் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் அமீர் ரஷீத் யாரல்லா (Abdul Amir Rashid Yarallah ) ஈராக்கிய இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டையும் மேற்பார்வையிட்டார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!