வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – பரபரப்பை ஏற்படுத்திய வடகொரியா!
வெனிசுலாவை அமெரிக்கா தாக்கிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங் (Lee Jae Myung) இன்று அரசுமுறைப் பயணமாக சீனா செல்லவுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி லீ கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வடகொரியா மேற்படி ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது தென்கொரியாவிற்கான ஒரு எச்சரிக்கை செய்தியாக கருதப்படுகிறது.
அதேநேரம் வடகொரியா வெனிசுலாவில் இருந்து வேறுப்பட்டது என்பதை நிரூபிக்க இந்த ஏவுகணை பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, இந்த ஏவுகணைகள் அண்டை நாடு, பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.





