இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ஈரானில் இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவிப்பு

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் “பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அரக்கி Araqchi இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, போராட்டக்காரர்களையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்கு வைத்து வெளிநாட்டு தலையீட்டை திட்டமிடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப், ஏற்கனவே ஈரானில் தலையீடு செய்யும் வாய்ப்பு குறித்து அச்சுறுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா நிலைமையை கவனித்து வருவதாகவும் ஈரானின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர்கள் உட்பட இரு வாரமாக இடம்பெற்று வரும் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை ஈரான் அரசு அறிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி, கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தனிமனித சுதந்திரப் பறிப்பு ஆகியவற்றிற்கு எதிராகத் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்களால் இதுவரை 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!