இந்தியா செய்தி

கெஜ்ரிவால் கைது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தூதரக அதிகாரி – இந்தியா எதிர்ப்பு

கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, அந்நாட்டு தூதரக அதிகாரிக்கு சம்மன் அனுப்பியது.

அமெரிக்காவின் கருத்து தேவையற்றது என வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து தெரிவித்து உள்ளது.

டில்லியில், மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், சமீபத்தில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை கைது செய்தது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம், ‛‛ கெஜ்ரிவால் கைது குறித்த தகவல்களை கண்காணித்து வருகிறோம். கெஜ்ரிவால் வழக்கில் நேர்மையான வெளிப்படையான மற்றும் விரிவான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்யப்பட வேண்டும்” என கருத்து தெரிவித்து இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், டில்லியில் உள்ள தூதரகத்தின் துணை தலைமை அதிகாரி குளோரியா பார்பெனாவுக்கு சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து குளோரியா பார்பெனா, டில்லியின் தெற்கு பிளாக்கில் உள்ள வெளியுறவு அமைச்சகம் முன்பு ஆஜரானார்.

முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனியும் கருத்து தெரிவித்து இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‛‛ இது இந்தியாவின் உள்விவகாரத்தில் அப்பட்டமான தலையீடு ” எனக்கூறியிருந்தது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!