இலங்கை

உலக தரவரிசைப் பட்டியலில் இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

முதல்முறையாக கொழும்புப் பல்கலைக்கழகம் உலகின் 1,000 சிறந்த பல்கலைக்கழகங்களிற்குள் இடம்பிடித்துள்ளது.

குறித்த தகவலை துணைவேந்தர் மூத்த பேராசிரியர் எச். டி. கருணாரத்ன (H. D. Karunaratne) தெரிவித்துள்ளார்.

QS (Quacquarelli Symonds) 2025 ஆம் ஆண்டிற்கான உலக பல்கலைக்கழக தரவரிசையை ஜூன் 4, 2024 அன்று வெளியிட்டது.

உலக பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்த ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகம் 951ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் மற்றும் அதிக மாணவர்களைக் கொண்ட பல்கலைக்கழகம் என்ற சாதனையையும் கொழும்புப் பல்கலைக்கழகம் தமதாக்கியுள்ளது

தரவரிசைப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் மூன்று இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உள்ளன, கொழும்புப் பல்கலைக்கழகம் நாட்டின் சிறந்த பல்கலைக்கழகமாகத் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம் அதன் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் விளைவுகள், கற்றல் அனுபவம், உலகளாவிய ஈடுபாடு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களின் செயல்திறனை மதிப்பிடும் வகையில், QS தரவரிசைகள் பல்கலைக்கழகங்களுக்கான உலகளாவிய அளவுகோலாக செயல்படுகின்றன.

(Visited 10 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content