இலங்கை

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை விடயத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுகிறது – ரணில்!

ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் உக்ரைனையும் இலங்கையையும் வித்தியாசமாக நடத்துவதன் மூலம் இரட்டை நிலைப்பாட்டைப் பின்பற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கமும் மற்ற அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று  கூறியுள்ளார்.

“இந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இலங்கை அரசாங்கமும் பிற பங்குதாரர்களும் இந்த விஷயத்தை இப்போதே கவனத்தில் எடுத்துகொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

போர் நடக்கும் காலப்பகுதியில் அந்நாடுகள் தேர்தலை ஒத்திவைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் வடக்கில் விடுதலைப் புலிகளும் தெற்கில் ஜேவிபியும் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் தேர்தல்களை நடத்தினோம். இலங்கை சரியான நேரத்தில் தேர்தல்களை நடத்தியது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் இரட்டைத் தரங்களைப் பின்பற்றுகிறது, அவர்கள் இலங்கையை வித்தியாசமாக நடத்துகிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்