இலங்கை

ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத்தொடர் : இலங்கை குறித்து ஆராயப்படும்!

ஐ.நா மனித உரிமை பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று (11.09) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

பேரவையின் தலைவர் வக்லெவ் பலெக்கின் தலைமையில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒரு மாதங்களுக்கு நடைபெறவுள்ளதுடன், கூட்டத்தொடரின் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆற்றவுள்ளார்.

இதன்போது இலங்கை தொடர்பாக முன்பு கொண்டுவரப்பட்ட 51/1 தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயப்படவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இலங்கையில் இருந்து சில தலைவர்கள் ஜெனீவா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!