ஐரோப்பா செய்தி

பிரான்சிலிருந்து ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரண்டு பெண்கள் மரணம்

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு பிரான்சின் கடற்கரையில் சுமார் 100 பேர் தற்காலிக படகு மூலம் இங்கிலாந்துக்குச் செல்ல முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த அறுபது பேர் மீட்கப்பட்டு, “தற்போது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்” என்று பிரெஞ்சு அதிகாரி இசபெல் ஃப்ராடின்-திரோட் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தம்பதியினரும் அவர்களது குழந்தையும் பவுலோனில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக இசபெல் குறிப்பிட்டுள்ளார்.

இறந்த இருவரும் சோமாலிய பெண்கள் என்று அடையாளம் காணப்பபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை சிறிய படகுகளில் ஆபத்தான கால்வாயை கடக்க முயன்று குறைந்தது 25 பேர் இறந்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி