சிலியில் இரு ரயில்கள் மோதி பாரிய விபத்து!

சிலியின் தலைநகரான சாண்டியாகோவிற்கு சற்று தொலைவில் பயணிகள் ரயில் ஒன்றுடன் சோதனை ஓட்டத்தில் இருந்த மற்றொரு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 09 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொல்லப்பட்ட இருவரை அதிகாரிகள் அடையாளம் காணவில்லை. காயமடைந்த ஒன்பது பேரில் நான்கு சீன பிரஜைகளும் சிலியின் சான் பெர்னார்டோவில் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)