இலங்கை செய்தி

நாணய சபையில் இருந்து இருவர் வெளியேறுகின்றனர்

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையில் இருந்து ராணி ஜயமஹா மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராணி ஜயமஹா மற்றும் சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் பல வருடங்களாக நிதிச் சபையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களாவர்.

புதிய இலங்கை மத்திய வங்கி சட்டம் தற்போது அமுலில் உள்ளதால், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, புதிய உறுப்பினர்களை நியமிக்க தீர்மானித்துள்ளார்.

இதுவரை நாணயச் சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததன் மூலம் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை