இலங்கை செய்தி

வெடிபொருட்களுடன் இருவர் கைது

அநுராதபுரம் மாவட்டம் பதவியா பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதவியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதவியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 01 ஆம் மைல் பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட வெடிபொருட்களை பொிஸார் மீட்டுள்ளனர்.

இதில் 90 ஜெலிக்னைட் குச்சிகள், 300 டெட்டனேட்டர்கள் மற்றும் 05 வெடிகுண்டுகள் ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஹிடோகம மற்றும் மாபலடிக்குளம் பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பயணித்த காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை