ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளா்ர்.
இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடையுமானால், ஈரானில் நடைபெற்று வரும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் எனவும் அவர் கூறினார்.
புதிய ஆட்சி மிகவும் நியாயமானது எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், பேச்சுவார்த்தையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகலும் தெரிவித்துள்ளார்.
ஆனால், விரைவில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலே ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படாவிட்டாலோ, ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் வளங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கை கடந்த பல தசாப்தங்களில் ஈரான் நடவடிக்கைகளால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கான பதிலடி எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்





