பொழுதுபோக்கு

சினிமாவை விட்டு விலகும் திரிஷா? அடுத்தது அரசியல் எண்ட்ரியா?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் திரிஷா. 40 வயதுக்கு மேல் ஆகியும் அவர் கைவசம் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது.

அப்படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா.

இதுதவிர அஜித்துடன் அவர் நடித்துள்ள மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள தக் லைஃப் படத்திலும் நடித்து முடித்திருக்கிறார் திரிஷா.

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் திரிஷா. இப்படத்தில் கமல்ஹாசனும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தக் லைஃப் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

தற்போது நடிகை திரிஷா நடிப்பில் சூர்யா 45 திரைப்படம் தயாராகி வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் திரிஷா. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ள மாசாணி அம்மன் படத்திலும் திரிஷா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

இவர் கைவசம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படம் ஒன்று உள்ளது. அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் நடித்திருக்கிறார் திரிஷா. இப்படமும் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இம்புட்டு பிசியாக உள்ள நடிகை திரிஷா, விரைவில் சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இதுபற்றி பேசியுள்ள அவர், திரிஷாவுக்கு சினிமாவில் நடித்து மிகவும் போர் அடித்துவிட்டது மட்டுமின்றி அவருக்கு மனச்சோர்வும் ஏற்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார். அதன் காரணமாக அவர் இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம்.

திரிஷா சினிமாவை விட்டு விலகும் முடிவு குறித்து அவரது தாயிடம் சொன்னபோது அவர் சம்மதிக்கவில்லையாம்.

இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் நடந்ததாக கூறிய அந்தணன், அவர் திருமணம் குறிந்த தகவல் தற்போதைக்கு எதுவும் இல்லாததால், அவர் அரசியலில் குதிக்கும் முடிவில் இருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அவர் சினிமாவை விட்டு விலகும் முடிவில் தீர்க்கமாக இருப்பதாக அந்தணன் கூறி இருக்கிறார்.

(Visited 15 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்