இலங்கை செய்தி

நாளை முதல் யாழ்ப்பாணம் – அனுராதபுரம் இடையே மீண்டும் தொடருந்து சேவை ஆரம்பம்

வடக்கு மார்க்கத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான சேவைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைக்குத் திரும்பவுள்ளன. நாளை அதிகாலை 6.00 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் நோக்கிய முதலாவது சேவை ஆரம்பமாகவுள்ளது. அத்துடன், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிய தொடருந்து நாளைய தினம் மாலை 2.30 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தாண்டிக்குளம் தொடருந்து நிலையத்தில் தற்போது புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், அங்கு தொடருந்துகள் நிறுத்தப்பட மாட்டாது எனவும், பயணிகள் இதனை அவதானத்திற் கொள்ளுமாறும் தொடருந்து திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!