இந்தியாவில் புதுமணத் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

இந்தியாவின் சத்தீஸ்கரில் இடம்பெற்ற கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுமணத் தம்பதிகள் பயணித்த கார் ஒன்று ட்ரக் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது, மணமக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மூவர் காரில் இருந்துள்ளனர், மேலும் அவர்கள் ஐந்து பேரும் விபத்தில் இறந்தனர்.
திருமண வைபவம் முடிந்து வரும் வேளையில் அவர்கள் இந்த விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
(Visited 12 times, 1 visits today)