திருமலை புத்தர் சிலை விவகாரம்: சந்தேக நபர்களுக்கு மறியல் நீடிப்பு!
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினருக்குரிய விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.
திருகோணமலை கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இதன்போது பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் முற்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு ஆதரவாக இன்றைய தினமும் நீதிமன்றத்துக்கு வெளியில் ஒரு சிலர் திரண்டிருந்தனர்.







