Site icon Tamil News

கேரளாவில் பயணியால் தள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதகர் உயிரிழப்பு

மத்திய கேரள மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த பயணியால் தள்ளப்பட்டதாகக் கூறப்படும் பயண டிக்கெட் பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.

திருச்சூர் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலப்பய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவர் எர்ணாகுளத்தைச் சேர்ந்த கே வினோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, கே வினோத், தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது, சம்பந்தப்பட்ட பயணியால் தள்ளப்பட்டுள்ளார்.

எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா நோக்கிச் சென்ற ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விரைந்து செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பயணி பாலக்காட்டில் கைது செய்யப்பட்டார்.

புலம்பெயர்ந்த தொழிலாளி என்று கூறப்படும் பயணி, டிக்கெட் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட பின்னர், ஓடும் ரயிலில் இருந்து வினோத்தை தள்ளிவிட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், எதிர்திசையில் வந்த மற்றொரு ரயில், அவரது உடல் மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Exit mobile version